PUBLISHED ON : ஆக 27, 2026 06:57 PM

இயற்கையின் பெருஞ்சீற்றத்திற்கு முன்னால் மனித சக்தி எவ்வளவு சிறியது என்பதை இமாலயச் சிகரங்கள் மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கின்றன. நேபாள நாட்டின் வடக்கே அமைந்த ரசுவா பகுதியில், கோஷி ஆற்றுப் படுகையில் திடீரென ஏற்பட்ட அந்தப் பெருவெள்ளமும் நிலச்சரிவும் ஒட்டுமொத்தப் பகுதியையும் சுடுகாடாக்கிவிட்டன.

'நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்...' என்ற அந்த ஒரே ஒரு வார்த்தையைக் கேட்கக் கடந்த இரண்டு நாட்களாகக் கோவை ஈஷா யோகா மையத்தின் ஒட்டுமொத்தப் பிராணனும் தவித்துக் கொண்டிருக்கிறது. எத்தனையோ சவால்களையும் விமர்சனங்களையும் கண்டு அசராதவர், கோடி மனங்களுக்கு அமைதியை போதிக்கும் ஆன்மீக குரு சத்குரு. ஆனால், தன் பிள்ளைகளைப் போல நேசித்து அனுப்பி வைத்த பக்தர்களின் தகவல் ஏதும் கிடைக்காமல், சத்குருவின் கண்கள் கசிந்து கலங்குவதைக் கண்டு சீடர்களும் அடியார்களுமே உறைந்து போயுள்ளனர்.கேவல்களும் அழுகுரல்களுமே மிஞ்சியிருக்கிறது.
பேரிடரின் துயரத்தை விடவும், தொடர்பில்லாத இந்த மௌனம் தரும் வலி மிகவும் கொடுமையானது. சேற்றுச் சகதிக்கு நடுவே சிக்கியுள்ள அந்த நல்லுள்ளங்கள், அனைத்துத் தடைகளையும் தாண்டி மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையோடு ஒட்டுமொத்தத் தேசமும் பிரார்த்தனையில் உறைந்திருக்கிறது.
-எல்.முருகராஜ்
