PUBLISHED ON : ஆக 19, 2025 12:00 AM

அந்த பெண் கண்ணாடி முன்னால் நின்றாள்.
கீமோதெரபி சிகிச்சை தொடங்கிய மூன்றாவது வாரம்.
அவள் விரல்கள் தலைமுடியைத் தொடும் போதே,அது கையோடு குவியலாக வந்தது,தொடர்ந்து விழுந்தது.
தலையில் முடியிழந்த அந்த தருணத்தில் அவருக்குத் தோன்றியது —
“நான் இனி யாருக்கும் அழகாகத் தெரிய மாட்டேனோ?என் குழந்தைகள் என்னைப் பார்த்து பயப்படுவார்களோ?”
சிகிச்சை தந்த வலியை தாங்கிக் கொண்டார் ஆனால் அவரால் தன் தலை முடி உதிர்வை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அந்த பெண்ணும் அப்படித்தான் உறவை நட்பை சந்திக்க விரும்பவில்லை தவிர்க்கமுடியாமல் சந்தித்தாலும் கண்கள் தரையைப் பார்த்தன.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அவரது கைக்கு மருத்துவமனை ஊழியர் மூலமாக ஒரு பெட்டி கிடைத்தது.
அதன் மீது எழுதப்பட்டிருந்தது:“Gift Hair, Gift Confidence” - A Cherian Foundation Initiative
அவள் குழப்பத்துடன் திறந்தாள்.அந்த பெட்டிக்குள், அற்புதமாக தயாரிக்கப்பட்ட ஒரு விக்.அவள் அதை மெதுவாக அணிந்தாள்.கண்ணாடியில் பார்த்தாள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு, கண்ணாடி பார்த்து சிரித்தாள்.
“இந்த முடி யார் கொடுத்தது?”
“ஒரு சிறுமி, தன்னுடைய தலைமுடியை வெட்டி, தானமாக கொடுத்தாள்.
அந்த சிறுமி கொடுத்தது தானமல்ல தனக்கான நம்பிக்கையை என்று அவர் உணர்ந்த தருணத்தில் அன்பால் கண்ணீர் வழிந்தது.விக்கை அணிந்த அடுத்த நிமிடமே அவர் உற்சாகத்தையும்,கண்ணியத்தையம் பெற்றார்.
அந்த அன்பை,நம்பிக்கையை ஆயிரக்கணக்கான பேர்களுக்கு தருவதுதான் செரியன் அறக்கட்டளையின் நோக்கம்.
சாதாரண தலைமுடி அது எவ்வளவு பெரிய சந்தோஷத்தையும் மரியாதையையும் தருகிறது என்பதை கடந்த வாரம் சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டிற்கு வந்தவர்களுக்குதான் தெரியும்.
புற்றுநோயின் பயமும் வலியும் நிரம்பிய இடமாக கருதப்படும் சென்னை அடையார் புற்றுநோய் நிறுவனத்தின் வளாகம், கருணை, தைரியம், நம்பிக்கை ஆகியவற்றால் ஒளிர்ந்தது. காரணம் செரியன் அறக்கட்டளை நடத்தும் “Gift Hair, Gift Confidence” (GHGC) என்ற புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தானமாக வழங்கும் நிகழ்ச்சியால்.
இந்த நிகழ்ச்சி ஒரு சாதாரண விழாவல்ல — அது ஒரு மனிதாபிமான இயக்கம். மருத்துவ சிகிச்சைக்கு அப்பாற்பட்டு, நோயாளிகளின் உற்சாகம், கண்ணியம், வாழ்நம்பிக்கை ஆகியவற்றை மீண்டும் எழுப்பும் ஒரு வாழ்வியல் கொண்டாட்டம்.
மருந்தைத் தாண்டிய குணமளிப்பு
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் லூக் கௌட்டினோ, பேசுகையில் ,நோயை எதிர்த்து போராடும் மன வலிமையை தருகிறது,” என்றார்.
2014-ல், தனது பாட்டியை புற்றுநோயால் இழந்த நினைவாக, ஜார்ஜ் சேரியன் இந்த யோசனையை முன்வைத்தார். அந்த துயரமான இழப்பு, கருணையாகவும், மனிதாபிமானமாகவும் மாறியது. மருத்துவமனையில் முடி உதிர்வால் நம்பிக்கை இழந்த நோயாளிகளுக்கு இலவசமாக தரமான விக்குகளை வழங்கும் முயற்சி அதிலிருந்து பிறந்தது.
2023-இல், இந்தக் கனவு ஒரு பெரும் இலட்சியமாக மாறியது. 1,600-க்கும் மேற்பட்ட விக்குகள் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள நோயாளிகளிடம் சென்றடைந்துவிட்டன.
???? வலைத்தளம்: www.cherianfoundation.org
-எல்.முருகராஜ்