sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 18, 2026 ,தை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

அவியல்

/

மவுனம் பேசினால்...

/

மவுனம் பேசினால்...

மவுனம் பேசினால்...

மவுனம் பேசினால்...


PUBLISHED ON : டிச 29, 2024

Google News

PUBLISHED ON : டிச 29, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களோடு மனிதர்கள் உறவாடும் இந்நேரத்தில், இது பேசினால்...

'நான் 58 ஏ 'வ்ரூம்... வ்ரூம்... - சேலம், ஓமலுார் அரசுப்பேருந்து பணிமனையில அன்றாடம் நான் இப்படி சோம்பல் முறிக்கிறப்போ காலையில மணி 6:00. கடந்த 38 ஆண்டுகளா தினமும் ஆறு தடவை அரங்கனுார் - சேலம் பழைய பேருந்து நிலையம் இடையில பயணிக்கிற நகரப்பேருந்து நான். என்னோட ஒருநாள் சராசரி பயண துாரம் 360 கி.மீ.,!

'அரங்கனுார், காட்டூர், காட்டுவளவு, பெரியப்பட்டி, ஏனாதி கிராம மக்கள் சேலத்துக்கு வந்து போக என்னைத்தான் அதிகம் பயன்படுத்துறாங்க. சரியா 7:00 மணிக்கு அரங்கனுார் மாரியம்மன் கோவிலை வட்டமடிச்சு, 'ஹார்ன்' மூலமா அலறுவேன். கட்டட வேலைக்கு போறவங்களும், படிக்கிற பிள்ளைகளும் சத்தம் கேட்டு என்கிட்டே ஓடியாந்திருவாங்க!

'சாயந்திரம் 5:00 மணி நடையில இவங்க எல்லாரோடவும் திரும்புறப்போ, கூலி பணத்தை 'டாஸ்மாக்'ல அழிச்ச புருஷன்கிட்டே நியாயம் கேட்குற சம்பவம் தினமும் நடக்கும்! 'மாதம்தோறும் மின் கணக்கீடு'ங்கிற தேர்தல் வாக்குறுதி பல் காட்டுற மாதிரி அந்த குடிகாரன் இளிப்பான்; சம்சாரம் பாவம்... அழும்!

'சிலநேரங்கள்ல இந்தமாதிரியான கண்ணீருக்கு போட்டியா பெய்யுற மழை எனக்குள்ளே ஊத்தும்... எல்லாரையும் நல்லா குளிப்பாட்டி விட்ருவேன். இது போதாதுன்னு, மழைநீர்ல மூழ்கியிருக்கிற செம்மாண்டப்பட்டி ரயிலடி சுரங்கப்பாதையை தவிர்க்க, 5 கி.மீ., சுத்திப் போவேன். அந்தசமயத்துல கூட அரசாங்கத்தை தான் மக்கள் திட்டுவாங்களே தவிர என்னை யாரும் திட்ட மாட்டாங்க!

'வெளிப்பார்வைக்கு இப்படி பவுசா தெரியுற நான் உள்ளுக்குள்ளே ஓட்டை உடைசலா இருந்தாலும் என் பிறப்புக்கு ஒரு அர்த்தம் இருக்குறதா உணர்றேன்; சரிதானே?'






      Dinamalar
      Follow us