UPDATED : ஜூலை 26, 2026 11:48 AM
ADDED : ஜூலை 17, 2026 07:51 PM

தேவையான பொருட்கள்
இறால் -1 அரைகிலோ
பச்சை மிளகாய் 8 எண்
கொத்தமல்லி இலைகள் - 1/4 கப்
இஞ்சி-பூண்டு விழுது - 2 ஸ்பூன்
சீரகம் விதை தூள் - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் 1/2 ஸ்பூன்
தக்காளி (நறுக்கியது) -1/2
சமையல் எண்ணெய் - 2 ஸ்பூன்
சுவைக்க உப்பு
தேங்காய் பால் - 2 ஸ்பூன்
அரிசிக்கு: பாஸ்மதி அரிசி - 2 கப்
இலவங்கப்பட்டை குச்சி - 1 அங்குலம்
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலைகள் -2
கிராம்பு- 2
நெய்-1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்க
செய்முறை: அரிசியை கழிவி, 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். குக்கரில் தண்ணீரை வேக வைக்கவும். கொடுதிக்கும் போது முழு கிராம் மசாலாக்களையும், சேர்க்கவும், நீரை வடிகட்டி அரிசி சேர்க்கவும். அரிசி அரை குக் ஆனதும், அடுப்பிலிருந்து வெளியே எடுத்தவுடன் தண்ணீ வடிகட்டி அரை சமைத்த அரிசியை ஒதுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாய், கொத்தமல்லி, பூண்டு மற்றும் 3 ஸ்பூன் தன்னிரை விட்டு நன்றாக பேஸ்ட் செய்யவும். அதை தனியாக வைக்கவும். இறால்களை சுத்தம் செய்யவும். அவற்றை அரை ஸ்பூன், மஞ்சள் துாள், மற்றும் அரை ஸ்பூன், உப்பு சேர்த்து நன்று பிசைந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை சூடாக்கி, இறால்களை 3 நிமிடம் லேசாக வறுத்து எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெய்யில் வெட்டப்பட்ட வெங்காயத்தை சேர்த்து லேசான பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.ஈரமான பேஸ்ட் சேர்த்து 5 நிமிடம் மிதமான வெப்பத்தில் வதக்கவும். மீதமுள்ள மசாலா மற்றும் தக்களியை சேர்த்து, எண்ணெய் வெளியேறும் வரை மிதமான வெப்பத்தில் வறுக்கவும். வறுத்த இறால்களை சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வறுக்கவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும். தேங்காய் பால் சேர்க்கவும்.இப்போது பேக்கில் பொருட்களை சிறிது நெய் கொண்டு பேஸ்ட் செய்து அரிசி ஒரு அடுக்கு போடவும். அதன் மீது இறால் ஒரு அடுக்கு போடவும். மீண்டும் அரிசி ஒரு அடுக்கு போடவும்.
அடுப்பை 5 நிமிடம் சூடாக்கவும். 350 டிகிரி பாரன்ஹீட்டில், 20 நிமிடம் சூடாக்கவும்.இது முடிந்ததும், வறுத்த வெங்காயம், கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். இதை ரைத்தாவுடன் பரிமாறவும்.
