sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ரஷ்யா - உக்ரைன் மோதல் உலகப் போருக்கு வழிவகுக்கும்: டிரம்ப் எச்சரிக்கை

/

ரஷ்யா - உக்ரைன் மோதல் உலகப் போருக்கு வழிவகுக்கும்: டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்யா - உக்ரைன் மோதல் உலகப் போருக்கு வழிவகுக்கும்: டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்யா - உக்ரைன் மோதல் உலகப் போருக்கு வழிவகுக்கும்: டிரம்ப் எச்சரிக்கை

12


ADDED : டிச 12, 2025 06:07 PM

Google News

12

ADDED : டிச 12, 2025 06:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: '' ரஷ்யா - உக்ரைன் இடையில் நடக்கும் மோதல் காரணமாக கடந்த மாதம் மட்டும் 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும்,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இருப்பினும் அடுத்த கட்ட முயற்சியாக, போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் அதிபர் டிரம்ப் கூறியதாவது: இந்த மோதலில் உயிரிழப்புகளை தடுக்க விரும்புகிறோம். கடந்த மாதம் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை நிறுத்த வேண்டும் என விரும்புகிறோம். அதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம்.

மோதல் தொடர்ந்து நடந்தால், மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும். இதனை முன்னரே கூறியிருந்தேன். அனைவரும் இதுபோன்று நடந்தால் மூன்றாம் உலகப்போரைத் தவிர வேறு வழியில்லை. இதனை பார்க்க யாரும் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

டிரம்ப் விரக்தி


போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் டிரம்ப் விரக்தியடைந்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ரஷ்யாவும், உக்ரைனும் மெதுவாக செயல்படுவதால் அதிபர் டிரம்ப் விரக்தியடைந்துள்ளார். வெறும் சந்திப்புக்காக மட்டும் கூட்டம் நடப்பதை அவர் விரும்பவில்லை. ஒரு முடிவும் எடுக்க முடியாத சந்திப்புகளால் டிரம்ப் சோர்வடைந்துவிட்டார். அவர் முடிவைத்தான் எதிர்பார்க்கிறார். வெற்று வார்த்தைகளை அல்ல. இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என அவர் விரும்புகிறார். இவ்வாறு கரோலின் லெவிட் கூறினார்.






      Dinamalar
      Follow us