sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஒரு நொடியில் நொறுங்கிய ரூ.2,800 கோடி: அமெரிக்க லாட்டரியில் அதிர்ச்சி

/

ஒரு நொடியில் நொறுங்கிய ரூ.2,800 கோடி: அமெரிக்க லாட்டரியில் அதிர்ச்சி

ஒரு நொடியில் நொறுங்கிய ரூ.2,800 கோடி: அமெரிக்க லாட்டரியில் அதிர்ச்சி

ஒரு நொடியில் நொறுங்கிய ரூ.2,800 கோடி: அமெரிக்க லாட்டரியில் அதிர்ச்சி


ADDED : பிப் 20, 2024 12:00 PM

Google News

ADDED : பிப் 20, 2024 12:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்க லாட்டரி குலுக்கலில் ஒருவருக்கு 340 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு ( இந்திய மதிப்பில் ரூ.2,800 கோடி) கிடைத்துள்ளது. ஆனால், அது அந்த லாட்டரிக்கு தவறாக பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்து, வாங்கியவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனையடுத்து அவர் நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பவர்பால் லாட்டரி நிறுவனம் பல்வேறு மெகா பரிசுகளுடன் குலுக்கல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், 2023 ஜன.,6 அன்று ஜான் சீக்ஸ் என்பவர், லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கி உள்ளார். குலுக்கலில் அந்த டிக்கெட்டுக்கு ரூ.2,800 கோடி பரிசு வென்றதாக பவர்பால் லாட்டரி இணையதளத்தில் அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து, மறுநாள் ஜான் சீக்ஸ் பவர்பால் நிறுவனத்தை அணுகி உள்ளார். ஆனால், தவறுதலாக, அந்த டிக்கெட் எண் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டதாக விளக்கம் அளித்தனர். ஆனால், இதனை ஜான் சீக்ஸ் ஏற்கவில்லை. லாட்டரி நிறுவனமும் தங்களது கருத்தில் உறுதியாக இருந்தது.

இதனையடுத்து, ஜான் சீக்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி வழக்கை வரும் 23 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us