sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

SIR என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி: நயினார் நாகேந்திரன் பேட்டி

/

SIR என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி: நயினார் நாகேந்திரன் பேட்டி

SIR என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி: நயினார் நாகேந்திரன் பேட்டி

SIR என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி: நயினார் நாகேந்திரன் பேட்டி

14


UPDATED : அக் 28, 2025 02:05 PM

ADDED : அக் 28, 2025 11:06 AM

Google News

14

UPDATED : அக் 28, 2025 02:05 PM ADDED : அக் 28, 2025 11:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: SIR என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை கண்டு திமுகவுக்கு பதற்றம் ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காகக் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருந்து தமிழரை பிரதமர் மோடி துணை ஜனாதிபதி ஆக்கி உள்ளார். தமிழகத்தில் புயல் சின்னம் உருவாகியுள்ளது.

பாஜ சார்பில் மாவட்ட மாநில நிர்வாகிகள், புயல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உதவி புரியவும் தயார் நிலையில் இருக்கிறோம். பருவமழை தவறாமல் வந்துள்ளது. சார் என்றாலே திமுகவுக்கு அலர்ஜி. அண்ணா பல்கலை சம்பவத்தில் இருந்தே, சார் என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது திமுகவினர் சேர்த்துள்ள போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று அவர்களுக்கு பயம்.

கொளத்தூர் தொகுதியில் மட்டும் 9 ஆயிரம் ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது நீக்கல், சேர்த்தல் பட்டியலை தமிழக அரசு அதிகாரிகள் தான் செய்யப் போகிறார்கள் எதற்கு அஞ்சுகிறார்கள். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை கண்டு திமுகவுக்கு பதற்றம் ஏன்? தோல்வி பயத்தால் திமுக கூட்டணிக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

மிளிரும் தமிழகம்!

இது குறித்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: மின்னணு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வேலைவாய்ப்பைப் பெருக்கும் விதமாக, பிரதமர் மோடி கொண்டு வந்த மின்னணு பாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் கீழ் ரூ.5,532 கோடி முதலீட்டில் 7 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்பிற்குரியது. அதிலும் 5 திட்டங்கள் மூலம், 77% முதலீட்டைத் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதோடு, தமிழகத்தின் முன்னேற்றத்தின் மீது மத்திய அரசு கொண்டுள்ள அபரிமிதமான அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.
ரூ.4,200 கோடி முதலீட்டின் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு தமிழகத்தின் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் வீறுநடையிட வழிவகுத்துள்ள பிரதமர் மோடிக்கும் அதற்கு உறுதுணையாகத் திகழும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் நன்றி. தமிழகத்தின் வளர்ச்சியில் முனைப்புடன் செயலாற்றும் மத்திய அரசினால் மின்னணு உற்பத்தியில் தமிழகம் முன்னணி வகிக்கும் நாளும், நமது சுயசார்பு பாரதக் கனவும் எட்டும் தொலைவில் தான் உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us