sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நேபாளம்-சீனா எல்லையில் வெள்ளத்தில் 35 பேர் மாயம்

/

நேபாளம்-சீனா எல்லையில் வெள்ளத்தில் 35 பேர் மாயம்

நேபாளம்-சீனா எல்லையில் வெள்ளத்தில் 35 பேர் மாயம்

நேபாளம்-சீனா எல்லையில் வெள்ளத்தில் 35 பேர் மாயம்


ADDED : ஜூலை 09, 2025 12:37 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காத்மாண்டு: நேபாளம் மற்றும் சீனாவின் எல்லையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில், இரு நாட்டிலும், 35 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

நம் அண்டை நாடான சீனாவில் பலத்த மழை பெய்து வருகிறது.

நேபாளத்தை ஒட்டியுள்ள சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஜிகாசே மாகாணத்தின் கிராங்க் துறைமுகம் அருகே, கட்டுமானப் பணி நடந்தது. அப்போது அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், 17 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. இதில், 11 பேர் சீன எல்லைக்குள்ளும், ஆறு பேர், நேபாள எல்லையிலும் மாயமானதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சீனா மற்றும் நேபாளத்தை இணைக்கும், மைத்ரி எனப்படும் நட்பு பாலம், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போதகோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், இந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதில், ஆறு சீனர்கள் உட்பட, 18 பேர் அடித்துச் செல்லப்பட்டதாக, நேபாள அரசு கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us