சீனாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 12 பேர் பரிதாப பலி; நால்வர் மாயம்
சீனாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 12 பேர் பரிதாப பலி; நால்வர் மாயம்
ADDED : ஆக 24, 2025 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஜிங்:சீனாவின் மஞ்சள் நதியின் குறுக்கே கட்டுமானத்தில் இருந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில், 12 பேர் பலியாகினர்; நா ன்கு பேரை காணவில்லை.
நம் அ ண்டை நாடான சீனாவின் சிச்சுவான் - கிவிங்ஹாய் மாகாணத்திற்கு இடையேயான ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாக, கிவிங்ஹாய் மாகாணத்தில் மஞ்சள் நதியின் குறுக்கே ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஸ்டீல் கம்பியை இறுக்கும் பணியின் போது, கம்பி அறுத்ததால் இப்பாலம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தின் மீது பணியில் ஈடுபட்டிருந்த 16 தொழிலாளர்களும் ஆற்றுக்குள் விழுந்தனர். இதில், 12 பேர் பலியாகினர்; நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.