sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இரட்டை வேடத்தில் திருமா போல வருமா?: பெருமாள் கோயிலில் 'பக்தி பரவசத்துடன்' வழிபாடு

/

இரட்டை வேடத்தில் திருமா போல வருமா?: பெருமாள் கோயிலில் 'பக்தி பரவசத்துடன்' வழிபாடு

இரட்டை வேடத்தில் திருமா போல வருமா?: பெருமாள் கோயிலில் 'பக்தி பரவசத்துடன்' வழிபாடு

இரட்டை வேடத்தில் திருமா போல வருமா?: பெருமாள் கோயிலில் 'பக்தி பரவசத்துடன்' வழிபாடு

34


UPDATED : ஏப் 04, 2024 12:40 PM

ADDED : ஏப் 04, 2024 12:39 PM

Google News

UPDATED : ஏப் 04, 2024 12:40 PM ADDED : ஏப் 04, 2024 12:39 PM

34


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியலூர்: ஹிந்து மதத்தை பற்றியும், ஹிந்து கடவுள்கள் பற்றியும் அடிக்கடி அவதூறாக பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேர்தல் வந்த உடன் அரியலூரில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தி பரவசத்துடன் வழிபாடு நடத்தியுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பலமுறை ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும்விதமாகவும், ஹிந்து மதத்துக்கு எதிராகவும் பேசி வருகிறார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வாய் திறப்பதில்லை. இதனால், திருமாவளவனின் ஹிந்து எதிர்ப்பு நிலைப்பாடு குறைந்தபாடில்லை. .

மேடைகளில் ஹிந்துக்கோயில்களை அவதூறாக பேசியும், ஹிந்து மதத்தை இழிவாக பேசியும் கூட்டத்திற்கு மத்தியில் முழங்கும் அவர், தனிப்பட்ட முறையில் கோயில் வழிபாடில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் வந்து விட்டால் இவருக்கு எங்கிருந்தோ ஹிந்து கடவுள்களின் நினைவு வந்து விடுகிறது. உடனே கோயில் கோயிலாக செல்கிறார்.

Image 1253155தற்போது பிரசாரத்திற்கு இடையே அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள புகழ்பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் திருமாவளவன். அவருடன் திமுக அமைச்சர் சிவசங்கரும் இருந்துள்ளார்.

ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக தனது சொந்த கிராமமான அங்கனூரில் உள்ள குல தெய்வமான மாயவன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டே வேட்புமனுத்தாக்கல் செய்தார் என்ற செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Image 1253156இப்படி தேர்தல் நேரங்களில் ஹிந்து கோயிலுக்கு செல்வதையும், கோயில்களில் சாமி தரிசனம் செய்வதையும்ம் வழக்கமாக கொண்டுள்ள திருமாவளவன், அரசியல் என வந்துவிட்டால் மட்டும் அதற்கு நேரெதிராக மாறி, அவதூறு பரப்பி அதனை ஓட்டுகளாக மாற்ற முயல்வதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us