மாற்று சக்தி நாமன்று; முதன்மை சக்தி நாம் என்கிறார் விஜய்
மாற்று சக்தி நாமன்று; முதன்மை சக்தி நாம் என்கிறார் விஜய்
ADDED : ஆக 12, 2025 11:26 AM

சென்னை: ''மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று.
முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்'' என நடிகரும், தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி வர்றோம். இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட, அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்.
ஜனநாயகப் போரில்...
இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ம் தேதி
வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில் நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போர்ல அவங்கள வென்று தமிழக மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு.
முதன்மை சக்தி
அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழகம்' என்ற தேர்தல் அரசியல் மையக் கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி. மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.