sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'தர்ப்பூசணி நல்ல உணவு சிலர் செயலால் பிரச்னை'

/

'தர்ப்பூசணி நல்ல உணவு சிலர் செயலால் பிரச்னை'

'தர்ப்பூசணி நல்ல உணவு சிலர் செயலால் பிரச்னை'

'தர்ப்பூசணி நல்ல உணவு சிலர் செயலால் பிரச்னை'


ADDED : ஏப் 05, 2025 02:29 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சென்னையில் நேற்று அளித்த பேட்டி:

நான்கு ஆண்டுகளில், சுகாதாரத்துறையில், 26,631 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்படைத்தன்மையான கலந்தாய்வில், 40,490 பேர் பயன் பெற்றுள்ளனர்.

சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனம் தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. அதற்கு தீர்வு காணப்பட்டு, அப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும். டாக்டர் பணியிடங்களில் காலியிடங்கள் இல்லாத நிலை உருவாகி இருப்பது போல், இத்துறையில் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும்.

தர்ப்பூசணியை பொறுத்தவரை, அது நல்ல நீர்ச்சத்து உள்ள உணவுப்பொருள். ஒரு சிலர் செய்த தவறினால், பெரிய பிரச்னையானது. ஒரு சிலர் ஊசி வாயிலாக சுவை கூட்டுவது, நிறம் மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், ஒட்டுமொத்தமாக தவறு நடந்திருப்பதாகக் கூற முடியாது.

உணவு பாதுகாப்புத் துறையின் தொடர் நடவடிக்கையால், கலப்படம் பெரிய அளவில் குறைந்துள்ளது. தவறு செய்வோர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us