sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பார்லி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது; சிபிஆருக்கு ராஜ்யசபாவில் வரவேற்பு

/

பார்லி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது; சிபிஆருக்கு ராஜ்யசபாவில் வரவேற்பு

பார்லி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது; சிபிஆருக்கு ராஜ்யசபாவில் வரவேற்பு

பார்லி குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது; சிபிஆருக்கு ராஜ்யசபாவில் வரவேற்பு

12


UPDATED : டிச 01, 2025 11:44 AM

ADDED : டிச 01, 2025 12:06 AM

Google News

12

UPDATED : டிச 01, 2025 11:44 AM ADDED : டிச 01, 2025 12:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ராஜ்யசபா தலைவராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தன் பணியை தொடங்கினார். அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், இன்று துவங்கி 19ம் தேதி வரை நடக்கும் என, பார்லி., விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, மேற்கு வங்கம், தமிழகம், உத்தர பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில், தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டுள்ளது.

திட்டமிட்டுள்ளனர்

இதில், மத்திய அரசின் தலையீடு உள்ளதாகவும், தேர்தல் கமிஷன் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், இதுதொடர்பாக பார்லி.,யில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அதனால், இக்கூட்டத்தொடரில் எஸ்.ஐ.ஆர்., விவகாரம் தொடர்பாக பிரச்னைகளை எழுப்ப அக்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. அத்துடன், டில்லி கார் குண்டுவெடிப்பு, டில்லி காற்று மாசு தொடர்பாகவும் கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா, அவருடைய மகனும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் உட்பட ஆறு பேர் மீது புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதால், இந்த விவகாரமும் இந்தக் கூட்டத்தொடரில் பூதாகரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், அணுசக்தி, உயர்கல்வி, பெருநிறுவன சட்டம், சண்டிகர் நிர்வாகம் தொடர்பான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் உட்பட 14 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 'வந்தே மாதரம்' பாடலின், 150வது ஆண்டை குறிக்கும் வகையிலான சிறப்பு விவாதம் நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.

அமோக வெற்றி

பீஹார் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அதனால், மத்தியில் ஆளும் தரப்பு மிகுந்த தெம்புடன் உள்ளது. அதேநேரத்தில், இந்தத் தேர்தல் முடிவானது, எதிர்க்கட்சிகளின், 'இண்டி' கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திஉள்ளது. தோல்விக்கு காங்கிரசே காரணம் என, கூட்டணியில் உள்ள கட்சிகள் கூறி வருகின்றன. அதனால், இந்தக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வார விடுமுறை நாட்களை கழித்தால், 15 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடக்கும் என்பதால், சபைகளை பிரச்னைகளின்றி சுமுகமாக நடத்தவும் அரசு தரப்பு திட்டமிட்டுள்ளது. ஆளும் மற்றும் எதிர்தரப்பினர், பல சர்ச்சைக்குரிய பிரச்னைகளை முன்னெடுத்து விவாதிக்க உள்ளதால், இந்த குளிர்கால கூட்டத்தொடரில் புயலடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் பதவியில் சிபிஆர்

ஜக்தீப் தன்கரின் ராஜினாமா கிளப்பியிருந்த புயலுக்கு பின், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று ராஜ்யசபா தலைவராக தன் பணியை தொடங்கினார். அவருக்கு, அவை பிரதமர் மோடி வாழ்த்தும், வரவேற்பும் தெரிவித்தார். பல்வேறு கட்சி உறுப்பினர்களும் சிபிஆருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவையை நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சிபிஆர் வேண்டுகோள் விடுத்தார்.

அனைத்து கட்சி கூட்டம்

குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதை முன்னிட்டு, அனைத்துக் கட்சி கூட்டம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டில்லியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பார்லி., விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகள் சார்பில், காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகோய், தி.மு.க., - எம்.பி., பாலு, திரிணமுல் காங்., - எம்.பி., டெரிக் ஓ பிரையன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் மனோஜ் ஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தவும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்வைத்து ஒத்துழைக்கும்படியும், ஆளும் தரப்பு எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால், டில்லி கார் குண்டுவெடிப்பு, வெளியுறவு கொள்கைகள், எஸ்.ஐ.ஆர்., உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.








      Dinamalar
      Follow us