sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வந்தே பாரத் உட்பட ஏழு ரயில்களின் நேரம் மாற்றம்: ஜன., 1 முதல் அமல்

/

வந்தே பாரத் உட்பட ஏழு ரயில்களின் நேரம் மாற்றம்: ஜன., 1 முதல் அமல்

வந்தே பாரத் உட்பட ஏழு ரயில்களின் நேரம் மாற்றம்: ஜன., 1 முதல் அமல்

வந்தே பாரத் உட்பட ஏழு ரயில்களின் நேரம் மாற்றம்: ஜன., 1 முதல் அமல்

4


ADDED : டிச 29, 2025 05:09 AM

Google News

4

ADDED : டிச 29, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் உட்பட ஏழு விரைவு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளது.

தெற்கு ரயில்வேயில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் விரைவு, பயணியர் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை, கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் இறுதியில் வெளியிடப்பட்டது. வரும் 2026ம் ஆண்டிற்கான விரைவு, பயணியர் ரயில்களின் புதிய கால அட்டவணையை, ஜனவரியில் அமல்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்து உள்ளது.

புதிய கால அட்டவணைப்படி, சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்; தாம்பரம் - கொல்லம்; சென்னை - மதுரை வைகை; சென்னை - திருநெல்வேலி; சென்னை - செங்கோட்டை பொதிகை உட்பட ஏழு விரைவு ரயில்களின் நேரம், 10 முதல் 20 நிமிடங்கள் வரை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, திருநெல்வேலியில் இருந்து புறப்படும் நெல்லை விரைவு ரயில் 10 நிமிடங்கள், துாத்துக்குடியில் இருந்து புறப்படும் முத்துநகர் விரைவு ரயில், 25 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்களின் தாமதத்தை குறைக்கவும் விரைவு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், பல்வேறு வழித்தடங்களில் ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.

பாதைகளை மேம்படுத்துவதுடன் நவீன சிக்னல் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது. பிரதான வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகளும் முடிக்கப்பட்டு உள்ளன.

அடுத்த ஆண்டிற்கான புதிய கால அட்டவணை, ஜன., 1 முதல் அமலாகும். சென்னை - கோவை, சென்னை - மதுரை - கன்னியாகுமரி உட்பட பல்வேறு வழித்தடங்களில், தற்போதுள்ளதை விட 30 முதல் 40 நிமிடங்கள் பயண நேரம் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Image 1514429







      Dinamalar
      Follow us