ADDED : டிச 31, 2025 07:36 AM

தமிழகம் முழுதும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக அவல நிலையில் உள்ள சாலைகளை சரி செய்ய வக்கற்று இருக்கிறது தி.மு.க., அரசு. நல்ல நிலையில் இருக்கும் சாலைகளை, தங்கள் கட்சி கொடிகளை நடுவதற்காக தோண்டி சேதப்படுத்துகிறது. தமிழக மக்களின் வரி பணத்தில் போடப்பட்ட சாலைகள், மக்களின் போக்குவரத்துக்காகவா அல்லது தி.மு.க., கொடி வைக்கவா?
சென்னை அண்ணா சாலையில், இளைஞர் முகமது யூனுஸ், தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் இளம்பெண் ஷோபனா ஆகியோர் உயிரிழந்தது வெறும் சாலை விபத்துகளால் அல்ல. தி.மு.க., அரசின் அலட்சியத்தாலும், பொறுப்பற்ற தன்மையாலும் தான்.
தமிழகத்தில் உள்ள சாலைகள் தி.மு.க.,வின் சொத்து அல்ல. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, உடனடியாக தி.மு.க., நிறுத்தி கொள்ள வேண்டும். சேதப்படுத்திய சாலைகளை, தன் சொந்த செலவில், தி.மு.க., சீரமைக்க வேண்டும்.
- அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,

