sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தி.மு.க., கட்டுப்பாட்டில் தைலாபுரம்; அப்பா - மகனை பிரித்தவர் ஜி.கே.மணி: அன்புமணி காட்டம்

/

 தி.மு.க., கட்டுப்பாட்டில் தைலாபுரம்; அப்பா - மகனை பிரித்தவர் ஜி.கே.மணி: அன்புமணி காட்டம்

 தி.மு.க., கட்டுப்பாட்டில் தைலாபுரம்; அப்பா - மகனை பிரித்தவர் ஜி.கே.மணி: அன்புமணி காட்டம்

 தி.மு.க., கட்டுப்பாட்டில் தைலாபுரம்; அப்பா - மகனை பிரித்தவர் ஜி.கே.மணி: அன்புமணி காட்டம்


UPDATED : டிச 10, 2025 07:46 AM

ADDED : டிச 10, 2025 06:06 AM

Google News

UPDATED : டிச 10, 2025 07:46 AM ADDED : டிச 10, 2025 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: “தைலாபுரம் தோட்டமே தி.மு.க., கட்டுப்பாட்டில் தான் உள்ளது,” என்று, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற பா.ம.க., நிர்வாகிகள் கூட்டத்தில், அக்கட்சி தலைவர் அன்புமணி பங்கேற்று பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது: பா.ம.க.,வின் கட்சி ரீதியான ஒவ்வொரு ஒன்றியத்திலும் 25 கிராமங்கள் உள்ளன. அங்குள்ள வாக்காளர்களை, ஒன்றியச் செயலர் சந்தித்து கட்சியை பலப்படுத்த வேண்டும். விரைவில், பா.ம.க., இடம்பெறும் மெகா கூட்டணி அமைய உள்ளது. இதனால், வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., படுதோல்வி அடையும்; இது உறுதி.

கடந்த 2022ல் நான் பா.ம.க., தலைவரான அடுத்த நாளில் இருந்தே, எனக்கெதிரான சூழ்ச்சியை, கட்சியின் கவுரவச் செயலரான ஜி.கே.மணி துவக்கி விட்டார். எனக்கும், என் அப்பா ராமதாசுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தியதே அவர்தான். வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்தவிடாமல் துரோகம் செய்தவரும் அவர்தான்.

தேர்தல் கமிஷனை எதிர்த்து டில்லியில், ராமதாஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில், 30 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால், 3,000 பேர் பங்கேற்றதாக கூறி, ராமதாசை ஜி.கே.மணி ஏமாற்றி இருக்கிறார்.

இதுவரை வன்னியர்களையும், பட்டியலின மக்களையும், ஒன்றுசேர விடாமல் தடுத்த தி.மு.க., இப்போது, பா.ம.க.,விற்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இருக்கும் தைலாபுரம் தோட்டத்தையே, ராமதாசுடன் கூடவே இருக்கும் சிலர் வாயிலாக தி.மு.க., கைப்பற்றி விட்டது; 87 வயதான ராமதாஸ், குழந்தை போல மாறிவிட்டார்.

தி.மு.க., கைக்கூலிகளும் துரோகிகளும், தினம் ஒரு பொய்யை சொல்லி, அவரை ஏமாற்றுகின்றனர். மனதளவில் பலவீனமாக உள்ள ராமதாசை, தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். நான் அவர்களை ஒருநாளும் மன்னிக்க மாட்டேன். அடுத்த மூன்று மாதங்களில், பலரும் சிறைக்கு செல்வர். யார் யார் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. இவ்வாறு கூறினார்.

கமிஷன், கலெக் ஷனால் முதலீட்டாளர்கள் அச்சம்


தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை, 500 கோடி ரூபாய் செலவில், இரண்டு மாதங்களில் நடத்த முடியும். ஒரே மாதத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை முடித்தது போல, அதுவும் எளிதான ஒன்றுதான். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியதால், மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.
தி.மு.க., ஆட்சியில் கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன் அதிகரித்துள்ளதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சமடைந்து, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள்கூட, அவர்களின் புதிய தொழிற்சாலையை இங்கு தொடங்க முன்வருவதில்லை. இதை பற்றி, முதல்வருக்கு கவலை இல்லை.
- அன்புமணி, தலைவர், பா.ம.க.,







      Dinamalar
      Follow us