ADDED : டிச 23, 2025 07:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
'தமி ழர்களுக்கு எதிரான 2,000 ஆண்டு கால போரில், நாங்கள் தோற்க மாட்டோம். தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் மத்திய அரசின் வெறுப்பு சண்டையில் நாங்கள் நிச்சயம் ஜெயிப்போம்' என, முதல்வர் ஸ்டாலின், இந்திய இறையாண்மைக்கு எதிராக, பிரிவினைவாதத்தை விதைத்து, திருநெல்வேலியில் பேசினார்.
அவருடைய பேச்சில் முழுக்கமுழுக்க பிரிவினை வாதமே உள்ளது. ஒன்றாக இருக்கும் நாட்டை பிளவுபடுத்தும் எண்ணத்துடன் ஒரு மாநில முதல்வர் பேசியதை ஏற்க முடியாது. முதல்வரின் கருத்துகள் மீது விளக்கம் கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

