sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்று முதல் வழக்கம் போல் சேவை; மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

/

இன்று முதல் வழக்கம் போல் சேவை; மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

இன்று முதல் வழக்கம் போல் சேவை; மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

இன்று முதல் வழக்கம் போல் சேவை; மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

1


ADDED : அக் 17, 2024 07:13 AM

Google News

ADDED : அக் 17, 2024 07:13 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (அக்.,17) முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ நிர்வாகம், சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று (அக்.,17) முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம்போல் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும்.



சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக, மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது






      Dinamalar
      Follow us