sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

3வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

/

3வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

3வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

3வது நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

2


ADDED : டிச 29, 2025 04:35 AM

Google News

2

ADDED : டிச 29, 2025 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் மூன்றாவது நாளாக நேற்றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

கடந்த 26ம் தேதி மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து மாலை விடுவித்தனர்.

இரண்டாவது நாளாக நேற்று முன்தினம், சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து மாலை விடுவித்தனர்.

மூன்றாம் நாளாக நேற்று, சென்னை பிராட்வேயில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, நுழைவு வாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சில ஆசிரியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் 10 திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். தங்களின் போராட்டம் இன்றும் தொடரும் என, இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us