sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு: ஆசிரியர்கள் போராட்டம் நீடிப்பு

/

பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு: ஆசிரியர்கள் போராட்டம் நீடிப்பு

பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு: ஆசிரியர்கள் போராட்டம் நீடிப்பு

பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு: ஆசிரியர்கள் போராட்டம் நீடிப்பு

3


UPDATED : ஜன 05, 2026 05:59 AM

ADDED : ஜன 05, 2026 02:27 AM

Google News

3

UPDATED : ஜன 05, 2026 05:59 AM ADDED : ஜன 05, 2026 02:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தொடர்வதால், அரசு பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

அரசு பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இடைநிலை ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். தமிழகத்தில், 60,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றும் நிலையில், 2006 ஜூன் மாதத்துக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கும், அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் வெவ்வேறு ஊதிய விகிதம் உள்ளது.

இந்த வேறுபாட்டை களைந்து, சம வேலைக்கு சம ஊதியம் என்ற நிலையில், அனைவருக்கும் ஒரே மாதிரியான அடிப்படை சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று, 10வது நாளாக, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனை முன் உள்ள சுவாமி சிவானந்தா சாலையில், 1,000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், அவர்கள் கைது செய்யப்பட்டு, பல்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலர் ராபர்ட் கூறியதாவது: எங்களுக்கு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து விட்டு, தற்போது அரசு ஏமாற்றுகிறது. அதற்காக போராடும் எங்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் இடம் தர மறுக்கிறது.

இதுவரை, எங்களிடம் யாரும் பேச்சு நடத்தவில்லை. அதனால், இன்று பள்ளி திறக்கும் நிலையில், ஆசிரியர்கள் விடுப்பு எடுத்து, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் போராடுவர். அரசு தொடர்ந்து பிடிவாதம் பிடித்தால், நாங்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us