sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 சாலை பாதுகாப்பு தரவுதளம் சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கம்

/

 சாலை பாதுகாப்பு தரவுதளம் சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கம்

 சாலை பாதுகாப்பு தரவுதளம் சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கம்

 சாலை பாதுகாப்பு தரவுதளம் சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கம்


ADDED : ஜன 17, 2026 01:50 AM

Google News

ADDED : ஜன 17, 2026 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சாலை பாதுகாப்புக்கான தரவு தளத்தை, நாடு முழுதும் பயன்பாட்டிற்கு கொண்டு வர தயார் நிலையில் இருப்பதாக, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.,யின் ஆர்.ஜி.பி., ஆய்வகம், ஒடிஷா மாநிலத்துடன் இணைந்து, சாலை பாதுகாப்புக்காக, ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு தரவு தளத்தை உருவாக்கியது.

இந்த தரவு தளம், பல துறைகளில் இருந்து தரவுகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொள்கிறது. இதனால், ஆபத்து நேரங்களில் தேவையான உதவிகளை உடனுக்குடன் வழங்க வழி செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, இந்த ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு தரவு தளம், ஒடிஷா மாநில சாலை பாதுகாப்பில் வெற்றி கண்டுள்ளது. இதை நாடு முழுதும் விரிவுப்படுத்த தயார் நிலையில் இருப்பதாக, சென்னை ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறியதாவது:

சாலை பாதுகாப்பில், ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்ப கண்டு பிடிப்புகள் எப்படி சேவை வழங்கும் என்பதற்கு, 'ஆர்.ஜி.பி., உருவாக்கிய தரவு தளம் உதாரணம்.

சாலை பாதுகாப்பு மேலாண்மையை கணிசமாக வலுப்படுத்தும் இந்த தரவு தளம், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் சேவைக்காக தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us