sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

/

வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : மார் 08, 2024 01:49 AM

Google News

ADDED : மார் 08, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்தில் நேற்று, காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகங்களில் மூன்று நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று முதல் சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்தில், காத்திருப்பு போராட்டத்தை துவக்கப் போவதாக அறிவித்தனர்.

வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக வளாகத்திற்கு பதிலாக, பொதுப்பணித்துறை பின்புறம் போராட்டம் நடத்த, போலீசார் அனுமதி அளித்தனர். அங்கு, வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று போராட்டத்தை துவக்கினர்.

முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தங்களை அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; இல்லாவிட்டால் காத்திருப்பு போராட்டம் தொடரும் என, சங்கத் தலைவர் முருகையன், பொதுச்செயலர் சங்கரலிங்கம் ஆகியோர் தெரிவித்தனர்.

கோரிக்கைகள் என்ன?


 துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள, பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை, உடனே வெளியிட வேண்டும்
 இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணை அடிப்படையில் விதித்திருந்த ஆணையை, உடனே வெளியிட வேண்டும்
 பணியின் தன்மை கருதி, அனைத்து நிலை அலுவலர்களுக்கும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் அல்லது தனி ஊதியம் வழங்க வேண்டும்
 மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்
 பேரிடர் மேலாண்மைத் துறையில் கடந்த ஆண்டு கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும்
 லோக்சபா தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள, முழுமையான நிதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.








      Dinamalar
      Follow us