sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கட்டடத்தின் மதிப்பை காண்பிக்காத எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்; செலவிடப்பட்ட நிதியை எழுதுவதில் தயக்கம்

/

கட்டடத்தின் மதிப்பை காண்பிக்காத எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்; செலவிடப்பட்ட நிதியை எழுதுவதில் தயக்கம்

கட்டடத்தின் மதிப்பை காண்பிக்காத எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்; செலவிடப்பட்ட நிதியை எழுதுவதில் தயக்கம்

கட்டடத்தின் மதிப்பை காண்பிக்காத எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்; செலவிடப்பட்ட நிதியை எழுதுவதில் தயக்கம்


UPDATED : மார் 16, 2024 07:09 AM

ADDED : மார் 15, 2024 09:06 PM

Google News

UPDATED : மார் 16, 2024 07:09 AM ADDED : மார் 15, 2024 09:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளான குடிநீர், சாலை, கட்டடம் போன்ற பல்வேறு மக்கள் நல கோரிக்கைகளை, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக எம்.பி.,க்களுக்கு 5 கோடி ரூபாயும், எம்.எல்.ஏ.,க்களுக்கு 3 கோடி ரூபாயும், மத்திய - மாநில அரசுகள், தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒதுக்கீடு செய்கிறது.

இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் கட்டடம் அல்லது பிற திட்டங்களில், எவ்வளவு ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டது எனக் குறிப்பிடுவது வழக்கம். கட்டடத்தின் கல்வெட்டில் திட்ட மதிப்பு எழுதப்பட வேண்டும்.

ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், சமீப காலமாக, எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி நிதியில் கட்டப்படும் கட்டடங்களின் மீது, திட்ட மதிப்பு எவ்வளவு எனக் குறிப்பிடுவதில்லை.

இவற்றை கண்காணிக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் உள்ளது. புதிய கட்டடத்திற்கு செலவிடப்பட்ட நிதி பற்றி, பொதுமக்கள் விமர்சனம் செய்வர் என்பதற்காக, சமீப காலமாக திட்ட மதிப்பு பற்றி குறிப்பிடுவதில்லை என, அரசியல் கட்சியினரே கருத்து தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us