sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுக்கான அனுமதி ஏன் ரத்து செய்யப்படவில்லை? அன்புமணி கேள்வி

/

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுக்கான அனுமதி ஏன் ரத்து செய்யப்படவில்லை? அன்புமணி கேள்வி

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுக்கான அனுமதி ஏன் ரத்து செய்யப்படவில்லை? அன்புமணி கேள்வி

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுக்கான அனுமதி ஏன் ரத்து செய்யப்படவில்லை? அன்புமணி கேள்வி

1


ADDED : செப் 07, 2025 02:05 PM

Google News

1

ADDED : செப் 07, 2025 02:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுக்கான அனுமதி ரத்து செய்யப்படாதது ஏன்? மீண்டும் மீண்டும் விவசாயிகளுக்கு துரோகம் செய்வதா என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்தது. இதற்கு பெரும் கொந்தளிப்பு ஏற்படுவதை அறிந்த தமிழக அரசு, உடனடியாக அனுமதியை திரும்பப்பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது.

ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி அளித்த மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தமிழக அரசின் கீழ் செயல்படும் அமைப்பாகும். தமிழக அரசு ஆணையிட்டால் அதை உடனடியாக செயல்படுத்த வேண்டியது இந்த ஆணையத்தின் கடமை ஆகும். இது மிகவும் முக்கியமான பிரச்சினை என்பதால், தமிழக அரசு அறிவுறுத்திய நாளிலேயே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான அனுமதியை ஆணையம் ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை அனுமதியை ரத்து செய்யவில்லை. தமிழக அரசும் இது தொடர்பாக எந்த வினாவும் எழுப்பாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படாத நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தை அடுத்த மாதவனூரில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் பணிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் தொடங்கி விட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தான் அப்பணிகளை ஓஎன்ஜிசி நிறுத்தியது. அனுமதி ரத்து செய்யப்படவில்லை என்றால் ஓஎன்ஜிசி நிறுவனம் கிணறு அமைக்கும் பணிகளை எந்த நேரமும் மீண்டும் தொடங்கக்கூடும். அதனால், விவசாயிகள் எந்த நேரமும் ஒருவகையான அச்சம் மற்றும் பதட்டத்திலேயே உள்ளனர்.

20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதன்பின் ராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாவதை தடுக்க முடியாது. எனவே, தமிழக விவசாயிகளுக்கு மீண்டும், மீண்டும் துரோகம் செய்யாமல், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நாளைக்குள் ரத்து செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அன்புமணி கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us