sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எந்தவொரு வரிக்குறைப்பும் மக்கள் நலத்திட்டங்களை பாதிக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

/

எந்தவொரு வரிக்குறைப்பும் மக்கள் நலத்திட்டங்களை பாதிக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

எந்தவொரு வரிக்குறைப்பும் மக்கள் நலத்திட்டங்களை பாதிக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

எந்தவொரு வரிக்குறைப்பும் மக்கள் நலத்திட்டங்களை பாதிக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

31


UPDATED : ஆக 29, 2025 03:02 PM

ADDED : ஆக 29, 2025 02:58 PM

Google News

31

UPDATED : ஆக 29, 2025 03:02 PM ADDED : ஆக 29, 2025 02:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''எந்தவொரு வரிக்குறைப்பும், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு முக்கியமானதாக உள்ள மாநில அரசுகளின் வருமானத்தை பாதிக்கக்கூடாது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் மோடி அறிவித்தார். தற்போதைய 5 %, 12%, 18%, 28% என்ற நான்கு வரி அடுக்குகள், 5 மற்றும் 18 % என்ற இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாநிலங்களின் வருமானத்தை பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கு சேவையாற்றாது.

* மத்திய அரசு முன்மொழிந்துள்ள ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து,எதிர்க்கட்சிகள் ஆளும் எட்டு மாநிலங்களின் நிதியமைச்சர்கள், டில்லியில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.

* சீர்திருத்தத்தின் நோக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில், எந்தவொரு வரிக்குறைப்பும், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்கு முக்கியமான மாநில அரசுகளின் வருமானத்தை பாதிக்கக்கூடாது என வலியுறுத்தினோம். வரிக்குறைப்பின் பலன்கள் நேரடியாக ஏழை மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும்.

* வருவாய் நலன்களைப் பாதுகாக்கவும், நியாயமான முடிவுகளை உறுதி செய்யவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஆதரவைக் கோரி ஒரு மித்த கருத்து வரைவு உருவாக்கப்பட்டு ஜிஎஸ்டி கவுன்சில் முன் வைக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us