sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மார்கழி வழிபாடு: மார்கழி வழிபாடு

/

மார்கழி வழிபாடு: மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு: மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு: மார்கழி வழிபாடு


ADDED : டிச 18, 2025 11:57 PM

Google News

ADDED : டிச 18, 2025 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்கழி வழிபாடு

திருப்பாவை - பாடல் 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறிஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்துதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையில் ள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி போல் சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

திருவெம்பாவை - பாடல் 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோவண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோஎண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைகண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்தெண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்

பொருள்: ''ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை?'' என்ற பெண்களிடம், உறங்கிய பெண், ''அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக்கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா?'' என்றாள்.

எழுப்ப வந்தவர்களோ, ''அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதன்பின்பு எண்ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் துாங்கு,'' என்று கேலி செய்தனர்.






      Dinamalar
      Follow us