sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருப்பூரில் விதிமுறை மீறி அமைச்சர் உதயநிதி பேனர்கள்

/

திருப்பூரில் விதிமுறை மீறி அமைச்சர் உதயநிதி பேனர்கள்

திருப்பூரில் விதிமுறை மீறி அமைச்சர் உதயநிதி பேனர்கள்

திருப்பூரில் விதிமுறை மீறி அமைச்சர் உதயநிதி பேனர்கள்


UPDATED : பிப் 11, 2024 05:06 AM

ADDED : பிப் 11, 2024 01:40 AM

Google News

UPDATED : பிப் 11, 2024 05:06 AM ADDED : பிப் 11, 2024 01:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூரில் நடை மேம்பாலங்களில் விதிமுறை மீறி, அமைச்சர் உதயநிதியை வரவேற்று தி.மு.க.,வினர் பிளக்ஸ் பேனர்களை கட்டியுள்ளனர்.

திருப்பூரில் புஷ்பா சந்திப்பு, பார்க் ரோடு, டவுன்ஹால், ரயில்வே ஸ்டேஷன், நல்லுார் போன்ற இடங்களில் பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது.

முறையாக பராமரிப்பு, இல்லாத நிலையில், நடைமேம்பாலத்தின் இருபுறங்களில் விளம்பர பிளக்ஸ் பேனர்களும் கட்டப்பட்டன. இதனால், மக்கள் நடைமேம்பாலத்தை பயன்படுத்துவதை தவிர்த்தனர்.

சமீபத்தில், பார்க் சாலையில் உள்ள நடைமேம்பாலத்தில், சாலையோரம் வசித்து வந்த, 35 வயது பெண்ணை, இருவர் மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தாக்கினர். இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, நடைமேம்பாலத்தில் இருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.

நான்காவது குடிநீர் திட்டம் துவக்க விழாவுக்காக அமைச்சர் உதயநிதி இன்று திருப்பூர் வருகையையொட்டி தற்போது, அனைத்து நடைமேம்பாலங்கள் மீதும் ஆளும்கட்சி சார்பில், விளம்பர பேனர்களை கட்டியுள்ளனர். இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.

மேலும், திருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதனால், குண்டும், குழியுமாக இருந்த காலேஜ் ரோடு தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சாலையை தேண்டி கொடிக்கம்பம்

அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் மவுனம் காத்த மாநகராட்சி நிர்வாகம், உதயநிதி வருகைக்காக, அவசர கதியில் சாலை புதுப்பிப்பு பணி மேற்கொண்டது. புதுப்பிக்கப்பட்ட சாலையை தோண்டி, உதயநிதி வருகைக்காக கொடிகள் நடப்பட்டுள்ளன. இது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.








      Dinamalar
      Follow us