sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கலெக்டர் பெயரை சொல்லி மிரட்டுவதா?

/

கலெக்டர் பெயரை சொல்லி மிரட்டுவதா?

கலெக்டர் பெயரை சொல்லி மிரட்டுவதா?

கலெக்டர் பெயரை சொல்லி மிரட்டுவதா?


ADDED : மார் 12, 2024 08:07 PM

Google News

ADDED : மார் 12, 2024 08:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி மாவட்டத்தில் இரண்டு கர்ப்பிணியர், டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின், துரதிர்ஷ்டவசமாக கடந்த மாதம் உயிரிழந்தனர். இவற்றை தணிக்கை செய்த பின், சிகிச்சையில் தவறு இல்லை என்பது உறுதியானது. திருச்சி மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட இரண்டு மகப்பேறு டாக்டர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் நான்கு மகப்பேறு மருத்துவமனை உட்பட, 10 அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இந்த மருத்துவமனைகளுக்கு, 34 மகப்பேறு டாக்டர்கள் தேவை. ஆனால், 11 மகப்பேறு டாக்டர்கள் தான் உள்ளனர். இந்த மாவட்டத்திற்கு, 23 மகப்பேறு டாக்டர்களை பணியமர்த்த வேண்டும். ஆனால், மாவட்ட கலெக்டர் விதிகளை மீறி, மகப்பேறு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதை, அரசு டாக்டர்கள் சங்கம் கண்டிக்கிறது. இடமாற்றம் செய்யப்பட்ட டாக்டர்களில் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். மற்றொருவர், மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். ஆனாலும், அவர்களை கலெக்டரின் பெயரைச் சொல்லிமிரட்டுகின்றனர்.

தொடர்ந்து 72 மணி நேரம் டாக்டர் பணியாற்றும் சூழலில், காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



- கே.செந்தில்,

தலைவர், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்






      Dinamalar
      Follow us