sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தஞ்சை, திருச்சி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

/

தஞ்சை, திருச்சி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

தஞ்சை, திருச்சி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

தஞ்சை, திருச்சி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்


ADDED : நவ 05, 2025 05:52 AM

Google News

ADDED : நவ 05, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தஞ்சாவூர், திருவாரூர் உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை மையம் அறிக்கை:


மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.

இந்த அமைப்பு, இன்று வடக்கு, வடமேற்கு திசையில், மியான்மர் - வங்கதேச கடற்கரையை நெருங்க வாய்ப்புள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், தமிழகத்தில் வடமாவட்டங்களில் சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், திருச்சி மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் காரைக்காலில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை கனமழைக்கு வாய்ப்புஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us