இன்று 10, நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
இன்று 10, நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
ADDED : ஆக 22, 2025 02:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று (ஆகஸ்ட் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* வேலூர்
* திருப்பத்தூர்
* திருவண்ணாமலை
* விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* தர்மபுரி
* சேலம்
நாளை (ஆகஸ்ட் 23) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகப்பட்டினம்
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.