ADDED : மார் 29, 2025 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் நடக்கும் வாரச்சந்தை நேற்று ரம்ஜான் சிறப்பு சந்தையாக நடந்தது. 31ம் தேதி ரம்ஜான் பண்டிகை என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ரம்ஜான் பண்டிகைக்கு 3 நாள் இடைவெளி இருப்பதால், ஆடு விற்பனை மந்தமாக இருந்தது. இதனால் விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். அதிகாலை 3:00 மணி முதல் 9:00 மணி வரை நடந்த சந்தையில் ரூ. 4 கோடிக்கு விற்பனை நடந்தது.
வேப்பூர்: வேப்பூரில் நேற்று நடந்த வாரச் சந்தையில் அதிகாலை முதல் காலை 10 மணிவரை நடந்த விற்பனையில் ரூ. 4 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையாகின.

