sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குழந்தைகளை ஆபத்தில் வைத்திருக்க உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

/

குழந்தைகளை ஆபத்தில் வைத்திருக்க உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

குழந்தைகளை ஆபத்தில் வைத்திருக்க உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

குழந்தைகளை ஆபத்தில் வைத்திருக்க உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

12


UPDATED : நவ 22, 2025 05:56 AM

ADDED : நவ 21, 2025 05:29 PM

Google News

12

UPDATED : நவ 22, 2025 05:56 AM ADDED : நவ 21, 2025 05:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சேதமடைந்த பள்ளி கட்டடத்தில், நமது குழந்தைகளை ஆபத்தில் வைத்திருக்க உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில், சேதமடைந்த பள்ளி கட்டடத்தின் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அண்ணாமலை கூறி இருப்பதாவது நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகிலுள்ள விளாங்காட்டூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளிக் கட்டடங்கள், செயல்பாட்டுக்குத் தகுதியே இல்லாத, மிக மிக ஆபத்தான நிலையில், மேற்கூரைகள், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. மழை பெய்யும்போதெல்லாம், மேற்கூரை ஒழுகும் நிலையில் இருக்கிறது.

30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வரும் இந்தப் பள்ளிக்கு, புதிய கட்டடங்கள் கட்டவோ, மாற்று இடம் அமைக்கவோ, பள்ளிக் கல்வித்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தவிர, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள், பள்ளியின் வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ளன. எத்தனை ஆபத்தான நிலையில் இந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை வைத்திருக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன், பத்தாயிரம் அரசுப் பள்ளிகளுக்குப் புதிய கட்டடங்கள் கட்டித் தருவோம் என்று கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், முதல்வர் ஸ்டாலினும், இதுவரை எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பள்ளிகளுக்குக் கட்டடங்கள் கட்டியிருக்கிறார்கள் என்று பல முறை கேள்வி எழுப்பியும், இதுவரை எந்தப் பதிலும் அளிக்காமல் இருக்கிறார்கள்.

வாரம் ஒரு அரசுப் பள்ளியில், மேற்கூரை இடிந்து விழுவதும், சுவர் இடிந்து விழுவதுமாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர் பாதுகாப்பு என்பது, திமுக அரசுக்கு அத்தனை இளக்காரமாகிவிட்டது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், ஒரு கேள்வி. உங்கள் வீட்டுக் குழந்தைகளை, இப்படிப்பட்ட கட்டடத்தில், கல்வி பயில அனுப்புவீர்களா? தெரிந்தே நமது குழந்தைகளை இத்தனை ஆபத்தில் வைத்திருக்க உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா? இவ்வாறு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.






      Dinamalar
      Follow us