தி.மு.க., அரசும், கவர்னரும் புதுக்காதலர்களாக இணக்கம் செல்லுார் ராஜு கிண்டல்
தி.மு.க., அரசும், கவர்னரும் புதுக்காதலர்களாக இணக்கம் செல்லுார் ராஜு கிண்டல்
ADDED : அக் 16, 2024 09:22 PM
தி.மு.க., அரசுக்கு சொந்த புத்தியும் இல்லை. பிறர் சொல்வதைக் கேட்கும் புத்தியும் இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில் பருவமழை, புயலை சிறப்பாக எதிர்கொண்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தோம்.
ஆனால் தி.மு.க., அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை. மழை நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும், மகன் உதயநிதியும் போட்டோஷூட் நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை இரவு பெய்த ஒருநாள் மழைக்கே மதுரை தாங்கவில்லை. மழை பெய்யும்போது மேயர், அமைச்சர் வந்து பார்க்காமல் மழைநீர் வடிந்த உடன் ஆய்வு செய்கின்றனர்.
அமைச்சர் மூர்த்தி கூட, மதுரையில் அவர் தொகுதியில்தான் ஆய்வு செய்கிறார். மழையால் பாதிக்கப்பட்ட மக்கள், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு தக்க பதிலடி கொடுப்பர்.
தி.மு.க., அரசும், தமிழக கவர்னரும் புதுக்காதலன், புதுக்காதலி போல இணக்கமாக உள்ளனர். கவர்னர் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்றனர். ஆனால், முதல்வரும், மூத்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
திடீரென முதல்வர் டில்லி செல்கிறார். பிரதமரை சந்திக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 7,500 கோடி ரூபாய் ஒதுக்குகின்றனர். ஏதோ 'தேன்நிலவு' போல நடக்கிறது. கவர்னர் எப்போதும் அரசின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் குறைகளை எடுத்துச் சொல்லுவார். ஆனால், தற்போது மாறி இருக்கிறார்.
- செல்லுார் ராஜு,
முன்னாள் அமைச்சர்.

