sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 மூத்த குடிமக்களிடம் கையொப்பம் பெற்று ரேஷன் வழங்க முடிவு

/

 மூத்த குடிமக்களிடம் கையொப்பம் பெற்று ரேஷன் வழங்க முடிவு

 மூத்த குடிமக்களிடம் கையொப்பம் பெற்று ரேஷன் வழங்க முடிவு

 மூத்த குடிமக்களிடம் கையொப்பம் பெற்று ரேஷன் வழங்க முடிவு

2


ADDED : டிச 24, 2025 07:31 AM

Google News

ADDED : டிச 24, 2025 07:31 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும்போது, கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறைகளில் வழங்க இயலாத நிலையில், பதிவேட்டில் கையொப்பம் பெற்று, பொருட்களை வழங்க வேண்டும்' என, ரேஷன் ஊழியர்களுக்கு, உணவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில், மாதந் தோறும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே, உணவு பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டத்தை, அரசு துவக்கியுள்ளது.

அதன்படி, கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று, கார்டுதாரரின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்குகின்றனர். தொலைதொடர்பு சிக்னல் பிரச்னையால், கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு செய்ய முடிவதில்லை. இதனால், பொருட்கள் வழங்கப்படாமல், கார்டுதாரர்களை அலைக்கழிப்பு செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, 'வீடு தேடி பொருட்கள் வினியோகம் செய்யும்போது, கைரேகை சரிபார்ப்பு முறை, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் வழங்க இயலாத நிலையில், பதிவேட்டில் கையொப்பம் பெற்று, பொருட்களை வழங்க வேண்டும்' என, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு, தமிழக உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us