தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு விரைவில் தீர்மானம்

ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு விரைவில் தீர்மானம்

ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு விரைவில் தீர்மானம்


ADDED : ஜூன் 24, 2024 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2024 11:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

''மக்கள்தொகை கணக்கெடுப்புடன், ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று பா.ம.க., சட்டசபை தலைவர் ஜி.கே.மணி பேசும்போது, ''வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்,'' என்றார்.

அதற்கு முதல்வர் அளித்த பதில்:

இந்தப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று சொன்னால், ஜாதிவாரியான கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்புடன், மத்திய அரசால் நடத்தப்பட வேண்டும். இதற்காக, இந்த சட்டசபை கூட்டத் தொடரில், ஒரு தீர்மானத்தை கொண்டு வரலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். அதற்கு ஜி.கே.மணி ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us