sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?

/

சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?

சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?

சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வருகிறார்கள்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?

47


UPDATED : பிப் 27, 2025 10:05 AM

ADDED : பிப் 27, 2025 10:01 AM

Google News

UPDATED : பிப் 27, 2025 10:05 AM ADDED : பிப் 27, 2025 10:01 AM

47


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: 'சினிமாவில் காலாவதியான பிறகு அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள்' என வி.சி.க., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.



தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் நடந்த கட்சி கூட்டத்தில், திருமாவளவன் பேசியதாவது: ஒரு மாநில கட்சி என்று அங்கீகாரம் பெறுவதற்கே, 35 ஆண்டுகள் பெரும்பாடு பட நேர்ந்தது.

சில பேர், 50, 60 வயசு வரை சினிமாவில் நடித்து பொருளை தேடி, சுகத்தை தேடி, சொகுசாக வாழ்ந்து விட்டு, இளமை காலத்தை எல்லாம் சொகுசாக கழித்துவிட்டு, தேவையான அளவிற்கு சொத்து சேர்த்து வைத்து கொண்டுவிட்டு, காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள்.

அவர் ஊரு ஊராக இப்படி போய் அலைய வேண்டியது இல்லை. ஊரு ஊராக போய் கொடி ஏற்று வேண்டியது இல்லை. ஊரு ஊராக போய் மக்களை சந்தித்து பேச வேண்டியது இல்லை. உடனே கட்சியை துவங்கலாம்; அடுத்து ஆட்சிக்கு போகலாம். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

யார் பெயரையும் குறிப்பிடாமல், திருமாவளவன் மறைமுகமாக விமர்சித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது. அதேநேரத்தில், யாரை அவர் சொல்கிறார் என்ற கேள்வியும் எழ துவங்கி உள்ளது.






      Dinamalar
      Follow us