sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சுதந்திர தினத்தில் கருப்பு சட்டை சர்ச்சை: ஹெச்.எம்., மீது போலீசில் புகார்

/

சுதந்திர தினத்தில் கருப்பு சட்டை சர்ச்சை: ஹெச்.எம்., மீது போலீசில் புகார்

சுதந்திர தினத்தில் கருப்பு சட்டை சர்ச்சை: ஹெச்.எம்., மீது போலீசில் புகார்

சுதந்திர தினத்தில் கருப்பு சட்டை சர்ச்சை: ஹெச்.எம்., மீது போலீசில் புகார்

33


ADDED : ஆக 16, 2025 05:17 AM

Google News

33

ADDED : ஆக 16, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: சுதந்திர தின விழாவில், தலைமையாசிரியர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றதால் பா.ஜ., வினர் முற்றுகையிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் எஸ்.என்.வி., அரசு மாதிரி பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவுக்கு தலைமையாசிரியர் தர்மராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., முருகேசன் தேசியக் கொடி ஏற்றினார்.

தலைமையாசிரியர் கருப்பு சட்டை அணிந்து வந்ததால், பா.ஜ., வினர் கூடி கோஷம் எழுப்பினர். கொடியேற்ற நிகழ்வு நிறைவடைந்து எம்.எல்.ஏ., மற்றும் உடன் வந்த தி.மு.க., வினர் புறப்பட்டனர்.

அப்போது, பா.ஜ., நகர் தலைவர் சுரேஷ்பாபு தலைமையிலான கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்த நிலையில் எம்.எல்.ஏ., தன் காரில் புறப்பட்டார். பின்னர் பா.ஜ.,வினர் கலைந்தனர்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் பாபு, பா.ஜ., நகர தலைவர் ஆகியோர் தலைமையாசிரியர் தர்மராஜ் மீது, தேசியக் கொடியை அவமதித்ததாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us