sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதச்சார்பின்மை என்ற பெயரில் யாரையோ திருப்திப்படுத்த தி.மு.க., நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

/

மதச்சார்பின்மை என்ற பெயரில் யாரையோ திருப்திப்படுத்த தி.மு.க., நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

மதச்சார்பின்மை என்ற பெயரில் யாரையோ திருப்திப்படுத்த தி.மு.க., நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

மதச்சார்பின்மை என்ற பெயரில் யாரையோ திருப்திப்படுத்த தி.மு.க., நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

35


ADDED : ஜூலை 23, 2025 12:26 PM

Google News

35

ADDED : ஜூலை 23, 2025 12:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மதச்சார்பின்மை என்ற பெயரில், யாரையோ திருப்திப்படுத்த தி.மு.க., நாடகமாடிக் கொண்டிருக்கிறது என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;

மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகளுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை ரத்து செய்யக் கோரி, தமிழக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, குடல் இறக்கம் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதினத்தை, இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று, விசாரணை என்ற பெயரில் சுமார் ஒரு மணி நேரம் துன்புறுத்தி விட்டு, தற்போது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று தி.மு.க., அரசின் காவல்துறை கூறுவது, உள்நோக்கம் கொண்டது.

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பத்து வயது குழந்தை மீது பாலியல் தாக்குதல் நடத்தியவனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கிட்னி திருடும் தி.மு.க., கும்பலை விசாரிக்க நேரமில்லை. காவல்துறையினருக்கே தி.மு.க.,வினரால் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது. ஆனால், உப்பு சப்பில்லாத காரணங்களைக் கூறி, மதச்சார்பின்மை என்ற பெயரில், யாரையோ திருப்திப்படுத்த, நாடகமாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு.

அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதினத்தை தொடர்ந்து துன்புறுத்தும் போக்கை, தி.மு.க., அரசின் காவல்துறை கைவிட வேண்டும். உடனடியாக, அவரது முன்ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us