sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கடனுக்கு மேல் கடன் வாங்கி தமிழகத்தின் கழுத்தை நெரிக்கப் போகிறீர்களா? முதல்வருக்கு நயினார் கேள்வி

/

கடனுக்கு மேல் கடன் வாங்கி தமிழகத்தின் கழுத்தை நெரிக்கப் போகிறீர்களா? முதல்வருக்கு நயினார் கேள்வி

கடனுக்கு மேல் கடன் வாங்கி தமிழகத்தின் கழுத்தை நெரிக்கப் போகிறீர்களா? முதல்வருக்கு நயினார் கேள்வி

கடனுக்கு மேல் கடன் வாங்கி தமிழகத்தின் கழுத்தை நெரிக்கப் போகிறீர்களா? முதல்வருக்கு நயினார் கேள்வி


ADDED : டிச 25, 2025 07:32 PM

Google News

ADDED : டிச 25, 2025 07:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கடனுக்கு மேல் கடன் வாங்கி தமிழகத்தின் கழுத்தை நெரிக்கப் போகிறீர்களா? என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை: தமிழக அரசின் போக்குவரத்துத் துறை, மின்சாரத்துறை, டாஸ்மாக் உள்ளிட்ட அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள் லாபத்துடன் செயல்படும் வகையில் சீரமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னீங்களே, செஞ்சீங்களா? ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதாவது என்பது போல, நஷ்டத்தில் உள்ள அரசுப் பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுக்கப் போகிறோம் என்று தேர்தல் அறிக்கையில் அச்சடித்துவிட்டு அனைத்து அரசுத் துறைகளையும் கடனில் மூழ்கடித்துவிட்டீர்கள்.

இந்தியாவிலேயே அதிக இழப்புகளைச் சந்தித்த மின்வாரியங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது, ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களைக் கொடுக்க முடியாமலும் மக்களுக்குத் தரமான பஸ்கள் வழங்க முடியாமலும் போக்குவரத்துத்துறை முடங்கிக் கிடக்கிறது, அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்குப் பத்து ரூபாய் அதிகம் வசூலித்து டாஸ்மாக் முழுக்க ஊழல் மண்டிக் கிடக்கிறது.

உங்கள் ஆட்சி முடிய இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் இழப்பை எப்படி சரி கட்டப்போகிறீர்கள் முதல்வரே? மீண்டும் கடனுக்கு மேல் கடன் வாங்கி தமிழகத்தின் கழுத்தை மேலும் நெரிக்கப் போகிறீர்களா? இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us