sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'கண்ணடிச்சா மட்டும் வரப்போறாளா?'

/

'கண்ணடிச்சா மட்டும் வரப்போறாளா?'

'கண்ணடிச்சா மட்டும் வரப்போறாளா?'

'கண்ணடிச்சா மட்டும் வரப்போறாளா?'


ADDED : மார் 06, 2024 11:26 PM

Google News

ADDED : மார் 06, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வேலுார் தொகுதியில் மீண்டும் போட்டியிட, அமைச்சரும், தி.மு.க., பொதுச்செயலருமான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், நேற்று விருப்ப மனு அளித்தார்.

பின், நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:

வெள்ளத்தின் போது, மக்களுக்கு உதவி செய்வதற்கு பதிலாக, தி.மு.க., அரசு துயரத்தை தான் ஏற்படுத்தி கொடுத்தது என்ற கருத்தை, பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்களும், பொன்னும் பொருளும் கொடுத்தவர்களும், சேற்றில் நடந்தவர்களும் தான் அதுபற்றி பேச உரிமை உண்டு.

வானத்தில் வந்து பறந்தும் கூட பார்க்காதவர்களுக்கு பேச, எந்த உரிமையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு சுமுகமாக நடந்து வருகிறது; சீக்கிரம் முடித்து விடுவோம்.

தி.மு.க., கூட்டணியில் இருக்கக் கூடிய கட்சிகளை, அ.தி.மு.க., கூட்டணிக்கு இழுப்பதற்கு பேச்சு நடக்கிறது என்ற தகவல் எப்படி இருக்கிறது என்றால், ஒரு படத்தில் வரும் வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

'கையை பிடித்து இழுத்தும் வராதவள், கண்ணடிச்சா மட்டும் வரப் போறாளா' என்ற வசனம் தான் அது. அந்த வசனம் மாதிரி யாரும் கண்ணடித்தாலும் வர மாட்டர்; கையை பிடித்து இழுத்தாலும் போக மாட்டர்.

'கூட்டணியில் உள்ள கட்சிகளிடம், தி.மு.க., கெஞ்சி கொண்டு இருக்கிறது' என, முன்னாள் அமைச்சர் ஜெய்குமார் கூறியுள்ளார். அவர் எப்போதுமே அப்படித்தான் நகைச்சுவையாக பேசுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us