30 வயதுக்கு மேல் பக்கவாத பரிசோதனை : நடிகர் அஜித்தை பின்பற்ற 'அட்வைஸ்'
30 வயதுக்கு மேல் பக்கவாத பரிசோதனை : நடிகர் அஜித்தை பின்பற்ற 'அட்வைஸ்'
UPDATED : மார் 12, 2024 11:00 AM
ADDED : மார் 12, 2024 12:07 AM

சென்னை: 'நடிகர் அஜித்தை பின்பற்றி, 30 வயதுக்கு மேற்பட்டோர் பக்கவாதம், மாரடைப்பு அறிகுறி பரிசோதனை உள்ளிட்ட வற்றை மேற்கொள்ள வேண்டும்' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் இதயம், பக்கவாத பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொற்றா நோய்களை தடுக்க, மத்திய -- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
ஆனால், மக்களிடையே ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்வது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், முற்றிய நிலையில் பலர் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இந்நிலையில், 50 வயதை கடந்த நடிகர் அஜித், அவ்வப்போது உடற்பரிசோதனை செய்து கொள்ளும் வழக்கமுடையவர். சமீபத்தில் அவர் மேற்கொண்ட பரிசோதனை யில், காது - மூளை இடையே, நரம்பில் சிறிய வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.
அது, நாளடைவில் பக்கவாத பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்ததால், சிறிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தன் வழக்கமான பணிகளில் நடிகர் அஜித் ஈடுபட்டு வருகிறார்.
எனவே, நடிகர் அஜித்தை பின்பற்றி, 30 வயதுக்கு மேற்பட்டோர் அவ்வபோது உடற்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என, பொது சுகாதாரத் துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
2 ஆண்டுக்கு ஒரு முறை
உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் உள்ளிட்டவற்றால் தொற்றா நோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, 30 வயதை கடந்தவர்கள், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்கவாதம், இதயம், புற்று நோய் உள்ளிட்ட தொற்றா நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொற்றா நோய் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், முழுமையாக குணப்படுத்த முடியும்.
- டி.எஸ்.செல்வவிநாயகம்
இயக்குனர்பொது சுகாதாரத்துறை

