sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒற்றை யானை தாக்கி வனக்காவலர் படுகாயம்

/

ஒற்றை யானை தாக்கி வனக்காவலர் படுகாயம்

ஒற்றை யானை தாக்கி வனக்காவலர் படுகாயம்

ஒற்றை யானை தாக்கி வனக்காவலர் படுகாயம்


ADDED : ஜூலை 25, 2024 05:14 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 05:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் வனப்பகுதிக்கு உட்பட்ட, சூளகிரி அடுத்த மேலுமலை வனப்பகுதியில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஆண் யானை ஒன்று சுற்றித்திரிகிறது. அதை ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்ட, ராயக்கோட்டை வனச்சரகத்தை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் முயன்று வருகின்றனர்.

காலை சாமல்பள்ளம் அருகில் ஓட்டயனுாரில் சுற்றித்திரிந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்ட போது, வனக்காவலர் நரசிம்மன், 50, வனக்காப்பாளர் முருகேசன் ஆகியோரை யானை தாக்க முயன்றது. முருகேசன் தப்பிய நிலையில், நரசிம்மனை, யானை காலால் உதைத்து சென்றது.

இதில், படுகாயமடைந்த அவரை மீட்ட வனத்துறையினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி மற்றும் வனத்துறையினர் விரைந்து, மக்களை அப்பகுதிக்கு வரவேண்டாம் என, எச்சரித்தனர். தொடர்ந்து, ஒற்றை யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us