ADDED : மே 27, 2025 07:03 AM
சென்னை : தமிழகத்தில் பணியாற்றி வரும், 16 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி பிறப்பித்துள்ளார்.
அதன் விபரம்:
l தமிழக அரசின் சொத்தாட்சியாக பணியாற்றி வந்த லிங்கேஸ்வரன், சென்னை முதன்மை தொழிலாளர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
l சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, சென்னை முதலாவது கூடுதல் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்
l வேலுார் விரைவு நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி காயத்ரி, சென்னை 2வது கூடுதல் குடும்பநல நீதிமன்றத்தின், முதன்மை நீதிபதியாகிறார்
l பூந்தமல்லி 3வது கூடுதல் மாவட்ட நீதிபதி பாலகிருஷ்ணன், மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலராக மாற்றப்பட்டுள்ளார்
l சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலராக இருந்த நீதிபதி கே.சுதா, சென்னை உயர் நீதிமன்ற பதிவாளராக, ஆய்வு பிரிவுக்கு பொறுப்பேற்கிறார்
l ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிபதி ரோகிணி, மதுரை கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்
l கனிமவள சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோகேஸ்வரன், மதுரை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
l கடலுார் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லட்சுமி ரமேஷ், சென்னை குடும்பல நீதிமன்ற, 6வது கூடுதல் முதன்மை நீதிபதியாக பொறுப்பேற்கிறார்
l புதுச்சேரி அரசின் சட்டத் துறை செயலராக மாற்றுப்பணி அடிப்படையில் பணியாற்றி வந்த நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, மயிலாடுதுறை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
l சேலம் மகளிர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, சேலம் 3வது கூடுதல் மாவட்ட நீதிபதியாக மாற்றப்படுகிறார்
l கடலுார் வன்கொடுமை தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராமநாதன், தமிழக அரசின் சொத்தாட்சியராக நியமிக்கப்பட்டுஉள்ளார்
l மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி நாகலட்சுமி, மதுரை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கிறார்
l ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆபிரகாம் லிங்கன், சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற, 18வது கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
l மதுரை 3வது கூடுதல் நீதிபதி மாதவராமானுஜம், திருநெல்வேலி லோக் அதாலத் தலைவராக இடமாற்றம் செய்யப்பட்டுஉள்ளார்
l குழித்துறை கூடுதல் மாவட்ட நீதிபதி தோத்திரமேரி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற 20வது கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்
l நாகப்பட்டினம் போக்சோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி, திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

