நுாலகர் பதவி தேர்வு ஏப்.25ல் சான்றிதழ் சரிபார்ப்பு
நுாலகர் பதவி தேர்வு ஏப்.25ல் சான்றிதழ் சரிபார்ப்பு
ADDED : ஏப் 17, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பொது நுாலகத்துறை மற்றும் கருணாநிதி நினைவு நுாலகத்தில், பல்வேறு நிலை நுாலகர் பதவிக்கான டி.என்.பி.எஸ்.சி., தேர்வு, கடந்த ஆண்டு மே, 13ல் நடந்தது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் விபரம், இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு, வரும், 25ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, டி.என்.பி.எஸ்.சி.,யின் சென்னை தலைமை அலுவலகத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. விபரங்களை, www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

