sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு

/

திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு: அண்ணாமலை குற்றச்சாட்டு

13


UPDATED : ஏப் 23, 2024 04:41 PM

ADDED : ஏப் 23, 2024 04:36 PM

Google News

UPDATED : ஏப் 23, 2024 04:41 PM ADDED : ஏப் 23, 2024 04:36 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று இரவு ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது என்பவரை வாலிபர்கள் சிலர் கஞ்சா போதையில் தாக்கினர். படுகாயம் அடைந்த கான் முகமது தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருள் புழக்கம்

இந்நிலையில், இந்த வீடியோவை எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை பகிர்ந்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. முன்னெப்பதும் இல்லாத அளவில் போதைப்பொருள் எளிதாக கிடைக்கிறது.

கொடூரமான தாக்குதல்

மதுரையில் அப்பாவி இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களில், தமிழகத்தில் கஞ்சா போதையில் கொடூரமான தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

திமுகவின் அராஜகப் போக்கு

இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: லோக்சபா தேர்தலுக்காக வாலைச் சுருட்டிக் கொண்டிருந்த திமுக அரசு, தேர்தல் முடிந்ததும் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபைக்குச் சொந்தமான இடத்தை, சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை மீண்டும் துவங்கியிருக்கிறது திமுக. பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us