sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

புதிய மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி

/

புதிய மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி

புதிய மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி

புதிய மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி


ADDED : ஏப் 06, 2024 12:25 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:புதிய கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கு, ஒருங்கிணைப்பு பயிற்சி அளிக்க வேண்டியது கட்டாயம் என, கல்லுாரிகளுக்கு யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்பில் சேரும் போது, அவர்களது கற்றல் முறையில் மாற்றம் ஏற்படுகிறது.

உயர் கல்வி கற்றல் முறை குறித்து, பள்ளி முடிக்கும் மாணவர்களுக்கு உரிய விபரங்கள் தெரியாததால், முதலாம் செமஸ்டர் தேர்வுகளில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர்.

இந்நிலையை மாற்ற, முதலாம் ஆண்டில் சேரும் புதிய மாணவர்களுக்கு, உயர் கல்விக்கான ஒருங்கிணைப்பு பயிற்சியை, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் வழங்க வேண்டியது கட்டாயம் என, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.

அதாவது, கல்லுாரிகள், பல்கலைகளில் மாணவர்கள் நடந்து கொள்ளும் முறை, கற்றல் முறை, வளாக செயல்பாடுகள், ஆசிரியர்களுடனான அணுகுமுறை போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us