ADDED : ஏப் 03, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
துாத்துக்குடி ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணி நடக்கிறது. எனவே, பயணியரின் வசதியை கருத்தில் கொண்டு துாத்துக்குடி மேலுார் ரயில் நிலையத்தில் சென்னை எழும்பூர் - துாத்துக்குடி, மைசூர் - துாத்துக்குடி, துாத்துக்குடி - மைசூர் விரைவு ரயில்கள் இன்று முதல் ஏப்.16ம் தேதி வரை ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

