sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேர்தல் விதிகளை மீறியதாக 210 வழக்குகள்: எஸ்.பி.,பிரதீப் தகவல்

/

தேர்தல் விதிகளை மீறியதாக 210 வழக்குகள்: எஸ்.பி.,பிரதீப் தகவல்

தேர்தல் விதிகளை மீறியதாக 210 வழக்குகள்: எஸ்.பி.,பிரதீப் தகவல்

தேர்தல் விதிகளை மீறியதாக 210 வழக்குகள்: எஸ்.பி.,பிரதீப் தகவல்


ADDED : ஏப் 16, 2024 08:45 PM

Google News

ADDED : ஏப் 16, 2024 08:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:''திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது''என,திண்டுக்கல் எஸ்.பி.,டாக்டர் பிரதீப் கூறினார்.

அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய ராணுவ படையினர்,கேரளா போலீசார் என 4000 போலீசார் ஓட்டு மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 60 இடங்கள் பதற்றமான ஓட்டு சாவடிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறோம். அதுமட்டுமின்றி பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன்,மக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் போலீசார் பணியில் இருப்பார்கள். 24 மணி நேரமும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

ஏப்.18,19 ல் ஓட்டுசாவடி மையங்களில் எப்படி பணியாற்ற வேண்டும் என போலீசாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். இதேபோல் அரசியல் வாதிகளோடும் ஆலோசனை நடத்தி எதையெல்லாம் செய்ய வேண்டும். எதையெல்லாம் செய்ய கூடாது என தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளோம். தேர்தல் விதி அமலுக்கு வந்ததிலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுவை கட்டுப்படுத்துவதற்காக மது விலக்கு போலீசார் தீவிரமாக எல்லா பகுதிகளிலும் முகாம்கள் அமைத்து ஆய்வு செய்கின்றனர். டாஸ்மாக்குளில் அதிகளவில் மது பாட்டில்களை யாராவது வாங்கினால் அவர்கள் குறித்தும் தகவல் சொல்ல டாஸ்மாக் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us