/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு கூடாது: அர்ஜுன் சம்பத் கருத்து
/
பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு கூடாது: அர்ஜுன் சம்பத் கருத்து
பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு கூடாது: அர்ஜுன் சம்பத் கருத்து
பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு கூடாது: அர்ஜுன் சம்பத் கருத்து
ADDED : அக் 17, 2024 03:02 AM
சிவகாசி:தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என சிவகாசியில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது முதல்வர் ஸ்டாலின் இண்டியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள டில்லி சென்று விட்டார். பட்டாசு தொழிலில் கடந்த காலத்தில் இருந்த பிரச்னைகள் தற்போது குறைந்துள்ளது. ஆனால் முழுமையாக மாறவில்லை.
சரவெடி மற்றும் சில பட்டாசு மூலப் பொருட்களுக்கு தடை விதித்துள்ளதால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சரவெடிக்கு விதித்த தடையை நீக்க வேண்டும், அதிகாரிகள் அடிக்கடி சோதனைக்கு வருவதால் பட்டாசு உற்பத்தியாளர்கள் இடையூறுகளுக்கு ஆளாகின்றனர். தீப்பெட்டி தொழிலுக்கு பிரச்னையாக இருந்த சிகார் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் சீனாவுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படுகின்றது. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்.
பிராமணர் சமூகத்தை இழிவுபடுத்துபவர்களை கண்டித்தும் பிராமண சமூகத்தை பாதுகாக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்று ஒரு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் நவ. 3 ல் சென்னையில் அனைத்து சமுதாய தலைவர்கள் பங்கேற்கும் ஊர்வலம் நடைபெற உள்ளது என்றார்.
பா.ஜ., பொருளாதார பிரிவு மாநில செயலாளர் முத்துராமலிங்கம், கட்சியினர் உடன் இருந்தனர்.

