/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.சி., எஸ்.டி., ஊழியர்களுக்கு கண்துடைப்பாக குறைதீர் கூட்டம்; தொடர்ந்து புறக்கணிக்கும் நிலை அலுவலர்கள்
/
எஸ்.சி., எஸ்.டி., ஊழியர்களுக்கு கண்துடைப்பாக குறைதீர் கூட்டம்; தொடர்ந்து புறக்கணிக்கும் நிலை அலுவலர்கள்
எஸ்.சி., எஸ்.டி., ஊழியர்களுக்கு கண்துடைப்பாக குறைதீர் கூட்டம்; தொடர்ந்து புறக்கணிக்கும் நிலை அலுவலர்கள்
எஸ்.சி., எஸ்.டி., ஊழியர்களுக்கு கண்துடைப்பாக குறைதீர் கூட்டம்; தொடர்ந்து புறக்கணிக்கும் நிலை அலுவலர்கள்
ADDED : ஜூலை 29, 2025 05:16 AM
விருதுநகர்; தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி., ஊழியர்களுக்கு கண்துடைப்பாக குறைதீர் கூட்டங்கள் நடத்துவதாகவும், மாவட்ட நிலை அலுவலர்கள் பங்கேற்பதே இல்லை, என தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி., அலுவலர் ஆசிரியர் சங்கத்தினர் கூறுகின்றனர்.
எஸ்.சி., எஸ்.டி., ஊழியர்களின் குறைகளை தீர்க்க ஆண்டில் ஜனவரி, ஏப்ரல், ஜூலை அக்டோபர் மாதங்களில் அனைத்துத்துறை செயலகங்களிலும், இயக்குனரகங்களிலும், மாவட்ட அளவில் அனைத்து துறைகளிலும் எஸ்.சி., எஸ்.டி., அரசு ஊழியர், ஆசிரியர்களில் ஏ, பி, சி, டி, நிலை அலுவலர்களை பற்றாளர்களாக கொண்டு குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்.
இதில் மாநில அளவில் துறை செயலாளர்களும், மாவட்ட அளவில் ஆதிதிராவிட நல அலுவலர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவர்.
மாவட்ட அளவில் ஒவ்வொரு துறையிலும் குறைதீர் மனுக்களை பெற்று, அதை பெறப்பட்டது, தீர்வு காணப்பட்டது என தொகுத்து கலெக்டருக்கும், ஆதிதிராவிட நல அலுவலருக்கும் அனுப்ப வேண்டும். அவ்வாறு பெறப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் கலெக்டர், அடுத்த 15 நாட்களுக்குள் அனைத்து மாவட்ட அலுவலர்களும் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். இது தான் நடைமுறை.
ஆனால் எந்த குறைதீர் கூட்டமும் நிர்ணயிக்கப்பட்ட மாதம், கால இடைவெளியில் நடப்பது கிடையாது. மாவட்ட அலுவலர்கள் யாரையும் அழைக்காமல் முடித்து விடுகின்றனர். மாநில அமைப்பு செயலாளர் க.கருப்பழகு கூறியதாவது: மாவட்ட அளவிலான அதிகாரிகளை அழைக்க புகார்தாரர்கள் கோரினாலும், அழைப்பதே கிடையாது. அரசு இதற்கு நிரந்தர தீர்வு கண்டு அறிவித்த நடைமுறைப்படி எஸ்.சி., எஸ்.டி., ஊழியர்களுக்கான குறைதீர் கூட்டங்களை நடத்த வேண்டும், என்றார்.

